இந்திய ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏகே 203 வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது
ரஷ்யாவிடமிருந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த துப்பாக்கியின் சிறப்பம்சம் என்னவென்றால் பனி, மலை, மணல், தூசு என அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக இயங்க கூடியது. இதன் எடை 3.8 கிலோ இருக்கும். 400 முதல் 800 மீட்டர் வரை குறிவைத்து இலக்கை துல்லியமாக தாக்கும். இதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 700 குண்டுகளை வெளியேற்ற முடியும்.
இந்த துப்பாக்கியின் நீளம் 705 மில்லிமீட்டர் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதால், இந்திய ராணுவத்திற்கு வளம் சேர்க்கும் என்று இதனை வாங்குவதற்கு இந்திய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.