Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட் பாகங்கள்…. வெளியான தகவல்….!!!!

சீனாவானது விண்வெளியில் சொந்தமாக ஆய்வுநிலையத்தை அமைத்து வருகிறது. அண்மையில் விண்வெளி நிலையத்திற்கு தேவையுள்ள பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட் செயற்கை கோளை நிலைநிறுத்திவிட்டது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் எனவும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் செயற்கைகோள், விரும்பிய திசையில் போக உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒருபகுதி தான் பூமியில் விழவில் இருக்கிறது எனவும் அந்த பாகங்கள் மீது பெரியதாக உள்ளதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து விண்வெளியில் ஏவப்பட்ட 6 தினங்களுக்கு பின் சீனராக்கெட்டின் பாகங்களானது நேற்று பூமியில் விழுந்துவிடும் எனவும் ஆனால் எப்பகுதியில் விழும் என தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்துகொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் சீனராக்கெட் பாகங்களானது நேற்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென் கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக அதிவேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது. இதை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதே சமயத்தில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப்பாய்ந்து போகும்போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |