Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள்…. ராணுவ தலைமை தளபதி விவாதம்…!!!!!

இந்தியா,சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தின்போது அவர் அந்த நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் 4ஆம் தேதி ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூர் மந்திரி இராணுவத்தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார். மேலும் இந்தியா- சிங்கப்பூர் பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.சாங்கி கடற்படை தளம், இன்போ பியூசன் மையம், பிராந்திய எச்ஏடிஆர் ஒத்துழைப்பு மையம் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர் சென்று பார்வையிடுவார்  என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |