Categories
தேசிய செய்திகள்

இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு துணை நிற்கும்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… பிரதமர் மோடி கண்டனம்…!!!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மத்திய வியன்னா என்ற நகரில் மக்கள் பரபரப்பு மிகுந்த பகுதியில் திடீரென புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதனை ஆஸ்திரேலியா ஒரே மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளது. அந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் இருந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

பயங்கரவாதி போன்று சந்தேகிக்கும் வகையில் இருந்த ஒரு நபரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். அதுமட்டுமன்றி ஆறு வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக போலீசார் கூறியுள்ளனர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் அனைவரும் நகரத்தின் மையத்தில் இருந்து விலகி இருக்கவும், மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை தவிர்த்து பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆஸ்திரேலியாவின் தலைநகரில் நடந்த கொடூர தாக்குதலால் நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன், இந்த துயரமான நேரத்தில் இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு உறுதுணையாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |