Categories
அரசியல்

“இந்தியாவை பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன்!”…. பேச்சு தான் அப்படி?…. மோடியை சாடிய கே.எஸ்.அழகிரி….!!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பசியால் இறப்பதாக அதிர்ச்சி தகவலை ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நண்பர்களான அம்பானி, அதானி உள்ளிட்டோருக்கு பலமடங்கு சொத்துக்கள் கூடி கொண்டிருக்கிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Categories

Tech |