Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது….. கிரிக்கெட் வீரர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா சிக்கி தவிப்பதை பார்க்கும்போது என் இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலத்தை எதிர் கொண்டு, இதிலிருந்து விரைவில் வலிமையாக மீண்டு வருவீர்கள் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |