இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 340 மரணமடைந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,45,136 -ஆக அதிகரித்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.