Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசிகள்… மத்திய அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் பயன்படுத்தும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பு ஊசி செலுத்தப்படும் முதல் 100 பேரை ஏழு நாட்கள் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |