உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும் 25% மரணத்தை மார்பக புற்றுநோய் ஏற்படுத்துகிறது. 2004-ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் மார்பக புற்று நோயால் மரணம் அடைந்த பெண்களின் எண்ணிக்கை 5,19,000ஆகும்.
இந்த நிலையில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 பேர் மார்பக புற்று நோயால் இறந்தவர்கள்.