இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கையானது 18 லட்சமாக அதிகரித்து இருப்பதாகவும், மொத்த மக்கள்தொகையில் 2004-05ல் 14 சதவீதம் ஆக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 2021-22ல் 31 சதவீதம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 2047-க்குள் இரட்டிப்பாகும் என பிரைஸ் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி(பிரைஸ்) என்ற சிந்தனை அமைப்பு, “இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி” எனும் பெயரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 63 நகரங்களில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் நாட்டு மக்களில் 2021ன் வருமான அடிப்படையில் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
குறைந்தபட்சம் குடும்ப ஆண்டு வருமான ரூபாய்.1.25 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் மிகவும் வறுமையானவர்கள், ரூபாய்.5 லட்சம் -ரூ.30 லட்சம் வரையில் உள்ளவர்கள் நடுத்தர பிரிவு மக்கள், அதிகபட்சம் ரூ.2 கோடிக்கும் மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள் சூப்பர் பணக்காரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் 1994-1995ல் 98 ஆயிரமாக இருந்த சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கையானது, 2020-2021ல் 18 லட்சமாக அதிகரித்து உள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரம், அடுத்து தில்லி மற்றும் குஜராத் இடம்பெற்றுள்ளது. 2020-2021க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் சூரத் மற்றும் நாக்பூர் அதிகவருமானம் பெறும் பிரிவில் மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் நடுத்தரபிரிவு மக்கள் எண்ணிக்கை 14ல் இருந்து 31 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. நாட்டுமக்களில் 3ல் ஒருவர் நடுத்தர பிரிவில் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2047ம் வருடத்திற்குள் இரட்டிப்பாகும். ஒவ்வொரு 3 இந்தியர்களில் இருவர் இப்பிரிவில் இடம்பெறுவார்கள். ரூபாய்.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களில் 10ல் 5 பேர் கார் வைத்துள்ளனர். ரூபாய்.5 லட்சம் -ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களில் 10ல் 3 குடும்பத்தினர் கார் வைத்து உள்ளனர். 30 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டும் ஒவ்வொருவர் வீட்டில் கார் இருக்கிறது. சூப்பர் பணக்காரர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் 3 கார்கள் இருக்கிறது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கிறது.