இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5g தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5 சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் 6 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து ஐ.எம்.சி 2022 புதிய டிஜிட்டல் யூனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 5g சேவையை பொருத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்துவிட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 2 ஆம் இடத்தில் உள்ளது.