நான் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 581 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 252 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.