இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் முதல் நாளிலே ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் இன்று கொரோன தடுப்பூசி போடும் பணி தொடங்கியது இதற்காக 3351 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்பூசி போடும் பணியில் 16,755 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளான இன்று ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பூசி செழுதப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்ஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் வழங்ப்பட்டது. கோவக்ஸின் தடுப்பூசி 12 மாநிலங்களுக்கு விநியோக்கப்பட்டது.