இந்தியாவில் 17 % பெண்கள் மட்டுமே பணிக்கு போவதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூகதொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்ற விழிப்புணவை ஏற்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது.
எங்களது குழுமம் சாா்பாக இந்திய நிறுவனங்களின் நுழைவு நிலையில் பெண்களின் பங்கேற்பு எவ்வாறு உள்ளது என்பது பற்றி ஆய்வு நடத்தினோம். இவற்றில் 351 நிறுவனங்கள் கலந்துகொண்டன. நிறுவனங்களில் பெண்களுக்குரிய பாதுகாப்பு, மேம்பாடு, பிரச்னைகள் பற்றி ஏழு முக்கியப்பிரிவுகளில் பல கேள்விகள் இடம்பெற்றிருந்தது. ஐ.டி. துறையில் பெண்களில் பங்களிப்பு 35 % ஆக இருக்கிறது.
அதேபோன்று காப்பீடு, ஃபாா்மா, வங்கி, உற்பத்தி துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு 3 -15 % வரை அதிகரித்து உள்ளது. இருப்பினும் ஒட்டு மொத்தமாக கணக்கிடும்போது 17 % பெண்கள் மட்டுமே இப்போது பணிப்புரிகின்றனா். அதே சமயத்தில் ஆண்களின் சதவீதம் 65-க்கும் மேலாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் 42 -50 % பெண்கள் பணிக்கு போகின்றனா். பெண்களுக்குரிய பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிசெய்வதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது இந்தியாவிலும் உயரும்” என்று அவா் கூறினார்.