இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்த நிலையில் இந்தியாவிற்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்களும் வெளியேறுங்கள் என்று கூறியுள்ளது. இதற்காக லெவல் 4 எச்சரிக்கை விடுத்துள்ளது .லெவல் 4 என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்சகட்ட எச்சரிக்கையாகும்.