Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் நிலை வருத்தமளிக்கிறது..!” 10 மில்லியன் டாலர் வழங்குவதாக கனடா அறிவிப்பு..!!

இந்தியாவின் நிலையைக்கண்டு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்த கனடா அதிபர், சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். 

இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கனடா அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாவது, கொரோனாவின்  இரண்டாம் அலையால் இந்திய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. இந்த சமயத்தில் எங்கள் நண்பர்களுக்காக உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால் சுமார் 10 மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு வழங்குவதற்கு கனடா முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |