இந்தியாவில் வைத்து இளவரசர் பிலிப் புலியை சுட்டுக் கொன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரின் இளமைகால புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களில் இளவரசர் பிலிப் விளையாடுவது போன்றும், வீரதீர செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து இளவரசர் ஒரு புலியை கொன்றுவிட்டு அதன் முன்னால் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த 1961ம் ஆண்டு இந்தியாவில் Hunting Trip என்ற வேட்டையாடுவதற்கான பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது மகாராணி எலிசபெத் உடன் வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.