Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மோடி அரசின் கீழ் அசுர வளர்ச்சி…. பியூஸ் கோயல் கருத்து…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14ம் நிதி ஆண்டு மற்றும் 2021-22ம் நிதி ஆண்டிற்கு  இடையே 109 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

மேலும் 2013-14ம் நிதி ஆண்டில், பாசுமதியைத் தவிர்த்து, அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராகக இருந்தது, அதுவே, 2021-22 நிதியாண்டில் 109 சதவீதம் அதிகரித்து 6,115 மில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.மோடி அரசின் கொள்கைகளால், விவசாயிகள் உலக சந்தையை அணுகுவதும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யதும் எளிமையாகி இருக்கிறது என  அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |