நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில் சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார்.
சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார்.
இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது , இதில் படப்பிடிப்புக்கு செட் அமைத்தவர்கள், கிரேனை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து இயக்குனர் சங்கர் பிப்ரவரி 27ம் தேதி ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இத தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் இன்று, மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் இவர் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் அவரிடம் விபத்து பற்றி பலவிதமான கேள்விகள் என தகவல் வெளியாகின.