Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இந்தப் பகுதிக்கு மீண்டும் பேருந்துகளை இயக்குங்க”…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் பகுதியில் நாவிதன்புதூர், நந்தவனம்பாளையம், வெருவேடம்பாளையம் போன்ற ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குண்டடம் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்றவற்றிற்கு செல்வதற்காக அங்கு இயக்கப்படும் பேருந்தையே நாடி இருக்கின்றனர்.

ஆனால் பொது மக்களுடைய வசதிக்காக திருப்பூரில் இருந்து குண்டடம் வழியாக தாராபுரத்திற்கு ஒரு தனியார் பஸ்ஸும் தாராபுரத்தில் இருந்து ஜல்லிப்பட்டி வருவதற்கு ஒரு அரசு டவுன் பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. இதில் தனியார் பஸ் கலந்த சில ஆண்டுகளாகவே இயக்கப்படுவதில்லை.

இதனால் குண்டடம் பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது “எங்கள் பகுதியிலிருந்து அலுவலகப் பணிகளுக்காக குண்டடம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை செல்லவும் அங்கிருந்து எளிதாக திரும்பி வரவும் அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |