Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத யாரு கொடுக்க சொன்னாங்க….? வீடு வீடாக ஆட்டு இறைச்சி விநியோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்த நபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் வாக்களார்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும்படை அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு வார்டாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 12-வது வார்டு பகுதியில் வாலியுடன் ஒருவர் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்துள்ளார்.

அவரை பிடித்து வாளியை சோதனை செய்த பொது அதில் ஆட்டு இறைச்சி பாக்கெட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருபவர் என்றும் வீடு வீடாக சென்று 1 கிலோ ஆட்டு இறைச்சி பாக்கெட்டுகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனையறிந்த அதிகாரிகள் அவரது கடைக்கு சென்று சோதனை நடத்தி சுமார் 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்று ராயப்பன்பட்டி போலீசார் அந்த நபர் மீது வழக்குபதிவு செய்து எந்த கட்சியினர் இறைச்சி கொடுக்க சொன்னார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |