சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்னமனூர் காந்தி சிலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர் தேனி அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்த ஜெயராஜ் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விற்பனைக்காக 2 1/2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஜெயராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.