Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதோட முக்கியத்துவத்தை தெரிஞ்சிக்கோங்க..! முக கவசம் அணியாதவர்களுக்கு… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 5 பேருக்கு குறையாமல் நாள்தோறும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் வசூலிக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் காவல்துறையினர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

கொரோனா பரவலை தடுப்பது குறித்து அங்கு வந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு வந்த டிரைவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர். அப்பகுதியில் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் தலா ரூபாய் 200 வீதம் அபராதம் வசூலித்தனர்.

Categories

Tech |