நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். “140 கோடி மக்களுக்கும் கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில் எல்லா நாளும் தேசியக் கொடி ஏற்றுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.