Categories
தேசிய செய்திகள்

இதை கட்டாயம் பாலோ பண்ணனும்…. இல்லனா விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுங்க…. டி ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் கைகளை சுத்தமாக வைத்திருத்தல்,முகக் கவசங்கள் அணிதல் உள்ளிட்ட பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து விமான பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தங்களின் பயணம் முழுவதும் பயணிகள் அவற்றை அணிந்திருக்க வேண்டும். இதனை உறுதி செய்திட விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டும் முக கவசங்களை நீக்கிக் கொள்ளலாம்.

விமானத்தில் பயணிக்கும்போது அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மேற் கூறிய அறிவுரைகளை ஒருவேளை பின்பற்ற தவழும் எந்தப் பணியாக இருந்தாலும் தொடர்ச்சியான எச்சரிக்கைக்கு பின்னரும் கடைபிடிக்காத நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை விமானம் புறப்படுவதற்கு முன்பே கீழே இறக்கிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |