Categories
உலக செய்திகள்

இதெல்லாம் முக்கிய நோக்கம்…. அமைதி பேச்சு வார்த்தையில்…. எச்சரித்துள்ள உக்ரைன் அதிபர்….!!!

அமைதி பேச்சுவார்த்தையில் “உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புகளை திரும்ப பெறுதல்” என்பதே முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் ரஷ்யாவை இறங்கி வரச் செய்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அதிபருடைய ஆலோசகர் உள்ளிட்டோர் அடங்கிய உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையிலான குழு பெலாரஸ் எல்லைக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றடைந்தனர். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய துருப்புகளை திரும்ப பெறுதல் என்பதே முக்கிய நோக்கம் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர்க்குமாறு மேற்கத்திய நாடுகளை வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் போர் தீவிரமடைந்துள்ளதால் ரஷ்யாவுக்கு எதிராக போரிட விரும்பும் ராணுவ அனுபவம் வாய்ந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |