ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Nancy Faeser கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 15 வன்முறை செயல்கள் உள்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ரஷ்யர்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. புடின் படையெடுப்பை தொடங்குவதற்கு முன் சுமார் 2,50,000 ரஷ்யாவில் பிறந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் உக்ரைனில் பிறந்த 1,50,000 பேர் ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜெர்மனிக்கு தப்பித்து வந்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 109 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் உடல் ரீதியான தீர்வு போன்ற பதிமூன்று வன்முறை செயல்கள் அடங்கும். பெரும்பாலான குற்ற சொத்து சேதம் அவமதிப்பு மற்றும் வாயைமொழி அச்சுருத்தல்கள் போன்றவையாகும். இந்த மோதல் நம் சமூகத்தில் ஊடுருவ அனுமதி அளிக்க கூடாது எனவும் இது ஜெர்மனியில் வாழும் ரஷ்ய வம்சாவளியை கொண்ட மக்களின் போர் அல்ல. இது புடினின் கிரிமினல் போர் என்பதை நான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என ஜெர்மன் துறை Nancy Faeser அமைச்சர் கூறியுள்ளார்.