தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மதுக் கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது.
இதனைத் தொடர்ந்து உரிமை நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 பார்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக மூடப்பட வேண்டும். மேலும் மற்ற பார்கள் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும். மேலும் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று பா.ம.க. கோரிய போதிலும் தமிழக அரசு செய்திருக்கிறது.
இந்த நிலையில் ரூபாய் 4,500 கோடிக்கு மது விலைகளை உயர்த்துவது, புதிய மதுக்கடைகளை திறப்பது, மற்றும் பார்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது மதுவணிகத்தை நம்பி தான் இந்த அரசு செயல்படுகிறதா? என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது நல்லதல்ல. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்தமேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்று வருவாய்க்கான மாற்று திட்டங்களை வகுத்து படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.