Categories
உலக செய்திகள்

இது செய்தால் தான் ஊக்கத்தொகை… பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு… புகார் தெரிவித்த பணியாளர்கள்..!!

சுவிற்சர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள Nestle நிறுவனம் பணியாளர்களை அச்சுறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் இருக்கும் Nestle நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். இந்நிறுவனம் தங்கள் உற்பத்தியில் பிரச்னை வரக்கூடாது என்று தங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஸ்விச் மண்டலத்தில் Wangen பகுதியில் இருக்கும் Nestle நிறுவன பணியாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியதுடன் கொரோனா  பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளது.

இத்துடன் இந்நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் 330 பிராங்குகள் ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. எனினும் இப்பகுதியில் இருக்கும் Nestle பணியாளர்கள் இது கட்டாயப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாத பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணியாளர்கள் இது ஒருவகையான அச்சுறுத்தல் தான் என்று புகார் தெரிவித்துள்ளனர். அதாவது Nestle நிறுவனமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தங்கள் பணியாளர்களுக்கு கொரோனாவிற்கான ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அந்த தொகை வழங்கப்படும் என்று கூறுவது அச்சுறுத்துவதற்காக இருப்பதாக Wangen பகுதி பணியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் Nestle நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கும்,  வழங்கப்பட்ட ஊக்க தொகைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. இதனால் Wangen பகுதியின் மட்டும் அவர்களாகவே இந்த முடிவை தெரிவித்தார்கள் என்பது குறித்த விளக்கத்தை லிஸ்டில் நிறுவனம் அளிக்கவில்லை

Categories

Tech |