Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது செயல்படும் அரசா…? இல்ல செய்திக்கான அரசா”…? பதில் சொல்லுங்க முதல்வரே… காயத்ரி ரகுராம் விமர்சனம்…!!!

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொள்வது குறித்து அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த படியே வருகிறார் .அப்போது அங்கு இருக்கும் வீடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராத வண்ணம் கயிறு கட்டி வைக்கப்பட்டு உள்ளது . இதனால் மக்கள் வீட்டில் இருந்தபடியே  முதல்வருக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சரும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடி நடந்து செல்கிறார். இந்த போட்டோவை பகிர்ந்த  காயத்ரி ரகுராம் “இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே” என்று கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் வீட்டு முன்பு கட்டப்பட்ட அந்தக் கயிறை சிவப்பு கலரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |