Categories
தேசிய செய்திகள்

“இது ஏர்போர்ட்டா, இல்ல நீச்சல் குளமா”…? தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்…. வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், ஹரி நகர், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழையின் காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்று காலை முதல் டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும் பருவகாலத்தில் மொத்தம் 1,100 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டு டெல்லியில் பெய்த பருவமழையில் 1,050 மில்லி மீட்டர் மழைபதிவானது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சமாக மழை பதிவாகி உள்ளது. இதனால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. விமான நிலையம் முழுவதும் மழை நீர் காரணமாக நீச்சல் குளம் போல் காட்சி தருகின்றது.

இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம் கூறியதாவது: “4 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் திருப்பி விடப்பட்டுள்ளது. தலைநகரில் கனமழை காரணமாக விமான போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டு வருகின்றது. திடீரென பெய்த மழையால் விமானநிலையத்தின் முகத்துவாரத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இது சீரமைக்கப்பட்ட பிறகு விமானங்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |