மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும் கிளைகளில் உள்ளோர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு அமர்த்துங்கள். பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள் நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை என சொல்லும் அளவிற்கு தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை.
அவர்கள் உங்கள் வணிகத்திற்கு உதவ மாட்டார்கள். மேலும் கிளைகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களை முறையாக பணியமத்துங்கள். உள்ளூர் மொழி தெரியாத நபர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு உள்ள பணிகளை வழங்கக் கூடாது. இந்த நிலையில் நேர்மறையான முறையில் நம் வாடிக்கையாளர்களை அணுக வேண்டும் அவர்களுக்கு சேவை செய்யவே வங்கிகள் இருக்கிறது. வங்கிகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் வாடிக்கையாளர்கள் தேவையானதை செய்து தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.