தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் அரசுக்கு சொந்தமாக தைல மரக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.