Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி நடந்திருக்கும்?…. ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான  வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம்  தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர்  கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து  வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெங்கடேசன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த   குடும்பத்தினர் அவரை பல இடங்களில்  தேடியுள்ளனர். ஆனால் வெங்கடேசன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று வெங்கடேசன் அதே பகுதியில் அமைந்துள்ள விஜயராகவன் என்பவருடைய வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து   வெங்கடேசன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |