Categories
தேசிய செய்திகள்

இது என்ன அநியாயம்….? ஒரே சிரஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி….. பெற்றோர்கள் அதிர்ச்சி…..!!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பள்ளியில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது தடுப்பூசி செலுத்திய செவிலியர் ஒரே சிரஞ்ச் மூலமாக 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் சிலர் அதனை கவனித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .மேலும் இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய அந்த நபர் பள்ளியில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்திய நபர் யார் என்று தெரிய வந்தது. அந்த 39 குழந்தைகளுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களுடைய உடல்நிலை இருப்பதாகவும், மற்ற மாணவர்களுடைய பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |