Categories
தேசிய செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு!…. அசைவம் சாப்பிட்டா பாம்பு கடிக்குமா?…. காலம் காலமாக நம்பும் கிராம மக்கள்….!!!!

ஒடிசா தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இது தொடர்பாக தகவல் வெளியானதும், அந்த கிராமமக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்..? என பலரும் விசாரிக்க துவங்கினர். அப்போது வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அந்த கிராமமக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்புகடிக்கும் என நம்புவதாக கூறினர். காலம்காலமாக இதை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் எனவும் முன்னோர் கூறி இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்திலுள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகின்றனர். சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்திலுள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி உள்ளிட்ட வீட்டு விலங்குகளை வளர்ப்பதில்லை. இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்கு உள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்று கூறினர்.

Categories

Tech |