Categories
தேசிய செய்திகள்

இது என்னப்பா!…. எழவு வீடா இது?….. சிரித்த முகத்துடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட குடும்பத்தினர்…. நெகிழ வைக்கும் பின்னணி….!!!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளி பகுதியில் பனவெல்லில் குடும்பத்தில் மரியம்மா வர்கீஸ்(90) என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் கடந்த வாரம் காலமானார். இவரது கணவரான கிறிஸ்தவ மத போதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேர குழந்தைகள் உள்ளனர். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் நான்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களில் பலர் மூதாட்டியின் இறுதி மூச்சின் போது அருகில் இருக்க வந்து விட்டார்கள். இதனையடுத்து மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதி சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைக்குள்ளானது. ‘இது என்னப்பா… எழவு வீடா, பார்ட்டி கொண்டாட்டமா? இப்படியா சிரிச்சிக்கிட்டு போஸ் கொடுப்பாங்க?’ என்று சிலர் சிடுசிடுக்க, வேறு சிலரோ, ‘துக்க வீடு என்றாலே இறுக்கமான முகத்துடன்தான் இருக்க வேண்டுமா? இப்படி கலகலப்பாகவும் இருக்கலாமே?’ என்று ஆதரவுக்கொடி பிடிக்கிறார்கள். இது குறித்து மூதாட்டின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ கூறியது, மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின் போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம். அதன் பிறகு அவருடன் சிரிப்பும் நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டோம். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்த போது இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |