தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்று வாங்குவதை விட மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பலருக்கு ஆர்டர் செய்யாத பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதை பார்த்திருப்போம்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன்-13ஐ ஆர்டர் செய்தவருக்கு ஐபோன்-14 டெலிவரி செய்யப்பட்டது. அதாவது, ரூ.49,000 மதிப்புள்ள போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.79,900 மதிப்புள்ள போன் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் இது உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளனர்.