மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் சுத்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் நகராட்சி வளாகத்தில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு அதன் பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள பிரதான சாலையில் கடந்த சில நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு சில இடங்களில் ஏற்படும் நிலை இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி மேலாளர் காதர், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் நகராட்சி குடிநீர் பணியாளர்களை குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீராக்கும்மாறு கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தப் பிரதான சாலையில் ஏற்பட்ட உடைப்பு பொக்லின் எந்திரம் மூலம் பணியாளர்கள் சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டு திறந்துவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் உடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகத்தை பாராட்டினர்.