Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா..? பெட்ரோல் பங்க் நடத்தியவரின் விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிப்பட்டி கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்தார். இவர் பூவந்தி போலீஸ் சரகம் அருகே உள்ள படமாத்தூர் பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த பெட்ரோல் பங்க் குத்தகையில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் முருகானந்தம் சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் அறை ஒன்றில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பூவந்தி காவல்துறையினர் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |