5 வருடமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முருகேசனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.