மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களை இப்படி செய்தால் மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசம் இந்தூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய ஒரு நபரை இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து மிக முரட்டுத்தனமாக கையாளும் வீடியோவை பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா விதிமுறைகள் என்ற பெயரில் இப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயலை நாடு ஏற்றுக்கொள்ளாது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இப்படி செய்தால் யாரிடம் மக்கள் உதவி கேட்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.