Categories
மாநில செய்திகள்

இதற்கெல்லாம் தடை… அரசு திடீர் உத்தரவு… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் சாலைகளில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அவர் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |