Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதற்கு அனுமதி இல்லை” வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை..!!

உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |