Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் இறந்ததா….? பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

விவசாய நிலத்தில் புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புது குறிச்சி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புள்ளி மான் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது இறந்தது ஒரு வயதுடைய ஆண் புள்ளி மான். இந்த மான் இரை தேடி ஊருக்குள் நுழைந்தால் நாய்கள் துரத்தி கடித்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மானின் உடலானது அருகில் இருக்கும் வனப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |