இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நீதிபதி ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்ததால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் இருந்தவர் முகமது யூசப். இவர் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். பணியில் சேரும் பொழுது இவர் ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கொடுத்திருந்தார். ஆனால் முகமது யூசப் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பின்தங்கிய கிராமத்துக்கு குடிபெயர்ந்ததாக கிராம தலைவர்களால் சான்றிதழ் பெற்று வைத்துள்ளார்.
இந்தியாவில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகள் அங்கு கூடி இருந்தால் அவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். இதற்கான சான்றிதழை வைத்து தான் முகமது யூசப் பணியில் சேர்ந்துள்ளார் .ஒரு கட்டத்தில் உண்மையை கண்டறியும் குழுவினர் முகமது யூசுப்பின் முகவரியை சரி பார்த்த பொழுது அவர் பின்தங்கிய பகுதியில் வசிக்கவில்லை என்பது அம்பலமானது. பிறகு இதற்கான அறிக்கையை நீதித்துறைக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் நீதிபதி பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முகமது யூசப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து அவரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு காஷ்மீர் ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை நிரந்தரமாக பணியிலிருந்து விடுவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.