வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பெருநாழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.