நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவருக்கும், இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முகமது இலியாஸ் என்பவருக்குமிடையே இடம் பிரச்சனை இருந்திருக்கிறது. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியதால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இலியாஸ் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து பேச்சிமுத்துவை வெட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தடுக்க வந்ததால் அவரையும் வெட்டினார். இதில் காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பேச்சிமுத்து புகார் கொடுத்ததால் முகமது இலியாஸ்ஸை காவல்துறையினர் கைது செய்தனர்.