Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இங்க பஸ் இல்லை… தமிழக பேருந்தை வசமாக பயன்படுத்திய….. புதுவை பயணிகள் …!!

புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அதில் பயணம் செய்தனர்.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ள நிலையில் நேற்று இரவு வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றது.

புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வெளியூர்களில் இருந்து புதுச்சேரி வரும் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டனர். தமிழக அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் உள்ளூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடம் காலியாக உள்ளது.

Categories

Tech |