இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ்டர்ஸும் இறுதி வேட்பாளராக தேர்வாகினர். அவர்களின் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் வாக்களித்து வருகின்றனர்.
இந்த வாக்கு பதிவு அடுத்த மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் ட்ரஸ் தொடர்ந்து முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 570 கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் லிஸ் டிரஸ்க்கு 60% பேரும் , 39% ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.